கால நிகழ்வெளியின் ஆதி மையம்














அதற்குமேலும்
பிரிக்கவோ விரிக்கவோ முடியாத
புள்ளியொன்று
தனக்குள்ளே சுழன்றுகொண்டு 

அண்டமெங்கும் சிதறிக்கிடந்த
கண்கள்வழி
தன்னையே பார்த்துக்கொண்டது 

அதற்கு தனிமையில்லை - ஏனெனில்
அது தானே இல்லையென்று நினைத்தது 

தன்முனைப்பால்
சிதைந்து குழம்பிய மையம்
கடைசியாய் மனிதனை பிரசவித்தபோது
இறந்ததாய் சொல்லப்படுகிறது 

அதன் ஆவி
இன்னும் இங்கு உலவுவதாய்
புத்தன் போன்றோரால்
நம்பவும் படுகிறது 

தன் நினைவடுக்கை காலம் எனவும்
நிகழ்விருப்பை வெளி எனவும்
அதுவே பின்னாளில் பெயரிட்டதால்
இறந்திருக்க வாய்ப்பில்லை என
அறிவியலும் சொல்கிறது. 

No comments: